என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரம் அருகே இளம்பெண் மாயம்
காஞ்சீபுரம் அருகே இளம்பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அருகே காரைப்பேட்டை பகுதியில் வசிப்பவர் இந்திரன். இவரது மகள் அமுதவல்லி (19). இவர் டிப்ளமோ படிப்பு முடித்துள்ளார். வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தாய் மகேஸ்வரி காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Next Story






