என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே விவசாயி வீட்டில் கொள்ளை
    X

    செந்துறை அருகே விவசாயி வீட்டில் கொள்ளை

    செந்துறை அருகே விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழராயம்புரம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது 47) விவசாயி. இவரது மனைவி சுலோச்சனா(43). இவர்களது மகன்கள் பிரகாஷ் (18) , வெற்றிச்செல்வன்.

    நேற்று உலகநாதன் வெளியூரில் படித்து வரும் தனது மகனுக்கு பணம் அனுப்புவதற்காக ஆனந்தாவாடி கிராமத்தில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று விட்டார் .மனைவி சுலோச்சனா மாடு மேய்க்க சென்றிருந்தார். பின்னர் மாலையில் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது.

    மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் வரை இருக்கும்.

    இது குறித்து உலகநாதன் இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×