search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பம்பட்டில் மருத்துவ அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது
    X

    வேப்பம்பட்டில் மருத்துவ அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது

    வேப்பம்பட்டில் மருத்துவ அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    செவ்வாப்பேட்டை:

    வேப்பம்பட்டு பெருமாள்பட்டு கோவில் குப்பத்தை சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற இ.எஸ்.ஐ. மருத்துவமனை அதிகாரி. இவரது மனைவி பவானி.

    இவர்கள் கடந்த 11-ந் தேதி மருத்துவ சிகிச்சைக்காக வந்தனர். பின்னர் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன்நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டில் இருந்த 2 எல்.இ.டி டிவிக்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    இது குறித்து செவ்வாப்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தேவிகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த தமிழ்வாணன், கல்லு நித்யா, பாப்பன் சத்திரத்தை சேர்ந்த நந்த குமார் ஆகிய 3 பேரும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது.தெரியவந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலையில் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 2 டி.வி.க்கள் மீட்கபட்டது. பின்னர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×