என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வலியுறுத்தி தொடர் ஓட்டம்: தேனி போலீஸ்காரர் அறிவிப்பு
தேனி:
தேனி அருகே ஓடைப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக இருந்தவர் வேல்முருகன் (வயது45). ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது பாதுகாப்பு படையில் பணிபுரிந்தார்.
கடந்த 2003-ல் 81 நாட்கள் 3,600 கி.மீ. ஓடி சாதனை, நீச்சல் சாதனை என ஜெயலலிதாவின் அன்பை பெற்றார். இதற்காக அவரிடம் இருந்து பரிசு பெற்றவர்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது உண்ணாவிரதம் இருந்தார். விடுதலையான பிறகு மொட்டை போட்டுக் கொண்டார்.
சசிகலா முதல்வர் பதவி ஏற்றால் ஜெயலலிதா நினைவிடத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என அறிவித்தார். இதனால் சமீபத்தில் சஸ்பெண்டு செய்யப்பட்டார். தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கேட்டு தொடர் ஓட்டம் நடத்த உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மார்ச் 19-ந் தேதி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இருந்து தொடங்கி 490 கி.மீ. ஓடி ஜெயலலிதா நினைவிடம் சென்றடைவேன்.
வழியில் மக்களை சந்தித்து கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்போரிடம் கையெழுத்து பெறுவேன். கோரிக்கை மனுவை கவர்னரிடம் ஒப்படைப்பேன்.
ஆர்.கே.நகர். தொகுதி மக்களை சந்தித்து ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள் என கேட்பேன்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் ஆர்.கே.நகரில் போட்டியிட தகுதியற்றவர். அரசுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் செலுத்தாமல் இழுத்தடிக்கிறார். ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடக்கும் என அறிவித்து விட்டு அவர் ஓட்டு கேட்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்