என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாக்கோட்டை அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை அருகே உள்ள பெத்தாட்சி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயராணி (வயது 23). இவருக்கும், அறந்தாங்கி எல்.என்.புரத்தைச் சேர்ந்த தொழிலாளி முருகன் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
தற்போது கர்ப்பமாக உள்ள விஜயராணி, தாய்வீடு வந்துள்ளார். கடந்த 11-ந் தேதி மனைவியை பார்க்க வந்த முருகன், சீட்டுப்பணம் கொடுக்க வேண்டும் என ரூ. 500 வாங்கிச் சென்றாராம்.
ஆனால் அந்த பணத்தை சீட்டுக்கு கொடுக்காமல் முருகன் செலவு செய்து விட்டார். இதனால் மறுநாள் மனைவியை மீண்டும் சந்தித்த அவர், சீட்டுக்காக மீண்டும் பணம் கேட்டார். அவரின் நடவடிக்கையில் ஆத்திரம் அடைந்த விஜயராணி, கணவரை கண்டித்தார்.
இதில் மனவேதனை அடைந்த முருகன், பாலில் எலிமருந்து (விஷம்) கலந்து குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் சிகிச்சைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முருகன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சாக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்