என் மலர்

    செய்திகள்

    நலிந்தோருக்கு மருத்துவம், கல்விக்காக கருணாநிதி ரூ.3 லட்சம் நிதி உதவி
    X

    நலிந்தோருக்கு மருத்துவம், கல்விக்காக கருணாநிதி ரூ.3 லட்சம் நிதி உதவி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தி.மு.க. தலைவர் கருணாநிதி நலிந்தோருக்கு மருத்துவம் மற்றும் கல்விக்காக ரூ.3 லட்சம் நிதி உதவியை இன்று வழங்கினார்.
    சென்னை:

    தி.மு.க. கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டது. அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோருக்கு உதவித் தொகை 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வந்தது.

    30-வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைக்க கருணாநிதி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் - பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மீதமுள்ள 4 கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ. 4 கோடியே 23 லட்சத்து 90 ஆயிரம். மேலும் 2017, பிப்ரவரி மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 12 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் இன்று (14-ந்தேதி) வழங்கினார்.

    நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்து போகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்பட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×