என் மலர்
செய்திகள்

திருப்போரூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து நகை-பணம் கொள்ளை
திருப்போரூர்:
திருப்போரூர் கிழக்கு மாட வீதியில் வசித்து வருபவர் சண்முகம். இவர் திருப்போரூரில் உள்ள வங்கியில் அடமானம் வைத்த 4 பவுன் நகையை மீட்டு விட்டு ரூ. 44 ஆயிரம் பணத்தை எடுத்து வந்தார்.
அவற்றை தன்னுடைய மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்துக் கொண்டு தண்டலத்தில் உள்ள தனியார் ஹார்டு வேர்ஸ் கடைக்கு சென்றார். சிறிது நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்த போது பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த நகை- பணத்தை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காமிப்பு கேமராவில், 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் வருவதும் அதிலிருந்து கீழே இறங்கும் ஒருவன் சண்முகத்தின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து நகை-பணத்தை கொள்ளையடிக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது. இதை வைத்து திருப்போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






