என் மலர்
செய்திகள்

நம்பியூர் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
நம்பியூர் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தார்.
நம்பியூர்:
நம்பியூர் அருகே உள்ள சாவக்காட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு முள் காட்டில் ராயர்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது45). என்பவர் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்றுக் கொண்டிருந்தார்.
அவரை நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் கைது செய்தார். அவரிடமிருந்து 9 பிராந்தி பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் ராயர்பாளையத்தில் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (50) என்பவர் தன்வீட்டுக்கு முன் உள்ள முள்வேலி அருகே அரசு அனுமதியின்றிகூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்றுக்கொண்டிருந்தாராம்.
அந்தவழியாகரோந்து வந்த நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் அவரை கைது செய்தார். 8 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தார்.
Next Story






