என் மலர்
செய்திகள்

மதுரை மாவட்டங்களில் ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் போராட்டம்: 100 பேர் கைது
சிவகங்கை,விருதுநகர், ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ரேசன் கடைகள் முன்பு தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியது தொடர்பாக ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என புகார்கள் வந்தன. இதை கண்டித்தும், ரேசன் கடையில் பொருட்களை சரியாக விநியோகிக்க வலியுறுத்தியும் இன்று மாநில முழுவதும் தி.மு.க. சார்பில் ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 526 ரேசன் கடைகள் முன்பு அந்தந்த பகுதி தி.மு.க. கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரளிக்கோட்டை, திருப்பத்தூரில் உள்ள ரேசன் கடைகள் முன்பு மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இளையான்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நகர செயலாளர் குணசேகரன், பிரேமலதா செந்தில், பொருளாளர் துரைராஜ், முன்னாள் சேர்மன் முத்துதுரை, சங்கராபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மாங்குடி, சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் 36 வார்டு ரேசன் கடைகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதற்கட்டமாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சில பகுதிகளில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். அதன்படி சிவகங்கை நகர செயலாளர் துரைஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெய ராமன் உள்ளிட்ட 100-க் கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 379 ரேசன் கடைகளில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பந்தல்குடியில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையிலும், மல்லாங்கிணற்றில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையிலும், விருதுநகர் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையொட்டி பெரும்பாலான ரேசன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
ராஜபாளையம் அருகே முகவூரில் கூட்டுறவு வங்கி அருகில் உள்ள ரேசன் கடை முன்பு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.
ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் உள்ள ரேசன் கடை முன்பு நகர செயலாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.
ராமநாதபுரத்தில் 732 ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பேராவூரில் உள்ள ரேசன் கடை முன்பு மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
கீழக்கரையில் நகர செயலாளர் பசீர் அகமது, முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் சாகுல்அமீது ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேசுவரம், தொண்டி, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள ரேசன் கடை முன்பு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து இவர்கள் மம்சாபுரம் ரேசன் கடை முன்பும் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மணிமாறன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கவில்லை என புகார்கள் வந்தன. இதை கண்டித்தும், ரேசன் கடையில் பொருட்களை சரியாக விநியோகிக்க வலியுறுத்தியும் இன்று மாநில முழுவதும் தி.மு.க. சார்பில் ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 526 ரேசன் கடைகள் முன்பு அந்தந்த பகுதி தி.மு.க. கிளை செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அரளிக்கோட்டை, திருப்பத்தூரில் உள்ள ரேசன் கடைகள் முன்பு மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
இளையான்குடியில் முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், காரைக்குடியில் முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் நகர செயலாளர் குணசேகரன், பிரேமலதா செந்தில், பொருளாளர் துரைராஜ், முன்னாள் சேர்மன் முத்துதுரை, சங்கராபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மாங்குடி, சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காரைக்குடியில் 36 வார்டு ரேசன் கடைகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. முதற்கட்டமாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சில பகுதிகளில் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளை போலீசார் முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். அதன்படி சிவகங்கை நகர செயலாளர் துரைஆனந்த், தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெய ராமன் உள்ளிட்ட 100-க் கும் மேற்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் மாவட்டம் முழுவதும் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 379 ரேசன் கடைகளில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பந்தல்குடியில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையிலும், மல்லாங்கிணற்றில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையிலும், விருதுநகர் சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தையொட்டி பெரும்பாலான ரேசன் கடைகளில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
ராஜபாளையம் அருகே முகவூரில் கூட்டுறவு வங்கி அருகில் உள்ள ரேசன் கடை முன்பு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.
ராஜபாளையம் தெற்கு வைத்தியநாதபுரத்தில் உள்ள ரேசன் கடை முன்பு நகர செயலாளர் ராமமூர்த்தி, மகளிர் அணி அமைப்பாளர் சுமதி ராமமூர்த்தி தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்து கைதாகினர்.
ராமநாதபுரத்தில் 732 ரேசன் கடைகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பேராவூரில் உள்ள ரேசன் கடை முன்பு மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
கீழக்கரையில் நகர செயலாளர் பசீர் அகமது, முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் சாகுல்அமீது ஆகியோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமேசுவரம், தொண்டி, பரமக்குடி, கமுதி உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள ரேசன் கடை முன்பு தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து இவர்கள் மம்சாபுரம் ரேசன் கடை முன்பும் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக மணிமாறன் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






