என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை அருகே பூவந்தியில் விவசாயி கொலை: தங்கை கணவர் கைது
    X

    சிவகங்கை அருகே பூவந்தியில் விவசாயி கொலை: தங்கை கணவர் கைது

    குடும்ப பிரச்சினையில் விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தங்கையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே உள்ள சொக்கையன்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 40), விவசாயி. இவரது தங்கை தமிழரசிக்கும், அவரது கணவர் பசுபதிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை இருந்து வந்தது.

    இதில் தமிழரசி கோபித்துக்கொண்டு அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வருவார். அப்போது பாண்டி, சமரசம் பேசி தங்கையை கணவர் வீட்டில் விட்டு விட்டுவருவார்.

    இந்த நிலையில் நேற்று தமிழரசி சொக்கையன் பட்டியில் இருந்தபோது அங்கு வந்த கணவர் பசுபதியுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பாண்டி, பசுபதியை கண்டித்துள்ளார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பசுபதி திடீரென அவரை கல்லால் சரமாரியாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த பாண்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து பசுபதியை கைது செய்தார்.

    Next Story
    ×