என் மலர்
செய்திகள்

கூடுவாஞ்சேரியில் வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்-பணம் பறிப்பு: 3 பேர் கைது
செங்கல்பட்டு:
கூடுவாஞ்சேரி ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜா (25). இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த 3 மர்ம நபர்கள் திடீரென மோட்டார் சைக்கிளை மறித்தனர். ராஜா மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.
உடனே 3 பேரும் ராஜாவை கையால் தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறித்தனர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை எடுத்து தப்ப முயன்றனர். இதற்குள் ராஜா அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தப்ப முயன்ற 3 பேரையும் மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் காரணையை சேர்ந்த வீரமணி, நந்திவரத்தை சேர்ந்த ராமச்சந்திரன், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ஆனந்தன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.






