என் மலர்
செய்திகள்

காளையார்கோவில் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு
சிவகங்கை:
காளையார்கோவில் தாலுகா, சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்தவர் முத்துமாரி (29). இவர் குழந்தையுடன் வீட்டில் இருந்து சாமான்கள் வாங்க கடைவீதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம வாலிபர்கள் முத்து மாரியை வழிமறித்து அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து முத்துமாரி, காளையார்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கல்யாணகுமார் வழக்குப்பதிவு செய்து, மோட்டார் சைக்கிளில் வந்து நகை பறித்த மர்ம வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி தாலுகா இளமனூரைச் சேர்ந்தவர் சின்னபொண்ணு (55). இவரும், இவரது மாமியார் இருளாயியும் (74) நேற்றிரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில், வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் இருளாயி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பினான்.
இது குறித்து மருமகள் சின்னபொண்ணு கொடுத்த புகாரின் பேரில், இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






