என் மலர்
செய்திகள்

திருக்கோஷ்டியூர் அருகே கிராம மக்களின் முற்றுகையால் ரேசன் கடை மூடல்
திருக்கோஷ்டியூர் அருகே பிராமணன்பட்டி கிராமத்தில் 82 குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டதால் ஒட்டு மொத்த மக்களின் எதிர்ப்பால் 5 தினங்களாக ரேசன் கடை மூடப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே பிராமணன்பட்டியில் ரேசன் கடை உள்ளது. இக்கடையில் மொத்தம் 429 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இம்மாதம் 82 அட்டைதாரர்கள் பெயரி நீக்கப்பட்டதாகவும், ரேசன் கடையில் பொருட்கள் ஏதும் வழங்க முடியாது என்று ரேசன் கடை விற்பனையாளர் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ரேசன் கடையில் கேட்டதற்கு உங்களது பெயர்கள், வருமானம் அதிகம் உள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் ரேசன் கடை பொருட்கள் வழங்கக்கூடாது என்று உத்தரவு வந்துள்ளதாக கூறினார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரேசன் கார்டு பயனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவார்கள்.
இதனால் பிராமணன் பட்டியில் உள்ள 429 ரேசன் அட்டைதாரர்களுக்கு நீக்கப்பட்ட 82 பேருக்கு பொருட்கள் வழங்கினால் நாங்கள் வாங்குவோம். அதுவரை பொருட்கள் வழங்கக்கூடாது என்று கூறி ரேசன் கடையை முற்றுகையிட்டனர். இதனால் ரேசன் கடை பூட்டப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் அருகே பிராமணன்பட்டியில் ரேசன் கடை உள்ளது. இக்கடையில் மொத்தம் 429 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இம்மாதம் 82 அட்டைதாரர்கள் பெயரி நீக்கப்பட்டதாகவும், ரேசன் கடையில் பொருட்கள் ஏதும் வழங்க முடியாது என்று ரேசன் கடை விற்பனையாளர் கூறினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ரேசன் கடையில் கேட்டதற்கு உங்களது பெயர்கள், வருமானம் அதிகம் உள்ள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் ரேசன் கடை பொருட்கள் வழங்கக்கூடாது என்று உத்தரவு வந்துள்ளதாக கூறினார்கள். தகுதி நீக்கம் செய்யப்பட்ட ரேசன் கார்டு பயனாளிகள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் ஆவார்கள்.
இதனால் பிராமணன் பட்டியில் உள்ள 429 ரேசன் அட்டைதாரர்களுக்கு நீக்கப்பட்ட 82 பேருக்கு பொருட்கள் வழங்கினால் நாங்கள் வாங்குவோம். அதுவரை பொருட்கள் வழங்கக்கூடாது என்று கூறி ரேசன் கடையை முற்றுகையிட்டனர். இதனால் ரேசன் கடை பூட்டப்பட்டது.
Next Story






