என் மலர்
செய்திகள்

போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியது
போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது.
தாம்பரம்:
போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் காம்ளே, நிதித்துறை துணை செயலாளர்கள் வெங்கடேசன், நிதித்துறை ஆலோசகர் மற்றும் 9 போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் உள்ளிட்ட 15 பேர் குழுவினர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகத்தில் உள்ள 48 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தொழிற்சங்கத்திலும் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் இன்று தொடங்கியது.
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். போக்குவரத்து துறை செயலாளர் சந்திரகாந்த் காம்ளே, நிதித்துறை துணை செயலாளர்கள் வெங்கடேசன், நிதித்துறை ஆலோசகர் மற்றும் 9 போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் உள்ளிட்ட 15 பேர் குழுவினர் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் போக்குவரத்து கழகத்தில் உள்ள 48 தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு தொழிற்சங்கத்திலும் 2 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
அவர்கள் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
Next Story






