என் மலர்
செய்திகள்

காரைக்குடியில் வைர நகைகள் கொள்ளை: பெண்கள் உள்பட 4 பேர் கைது
காரைக்குடி:
காரைக்குடி சேர்ந்தவர் தண்ட பாணி (65). வைர கற்கள், தங்கம் வாங்கி விற்பவர். கடந்த மாதம் சில வியாபாரிகள் இவரிடம் 6 பவுன் தங்க நகை, 17 கிராம் வைரம் பதித்த தோடு, மற்றும் 100 வைர கற்களை விற்பதற்காக கொடுத்தனர்.
அதை தண்டபாணி தனது அறையில் வைத்து வியாபாரத்திற்காக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் காரைக்குடி திரும்பினார்.
தண்டபாணி தனது அறைக்கு சென்றபோது பூட்டு திறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது 6 பவுன் தங்க நகை, 17 கிராம் வைர கற்கள் பதித்த தோடு, மற்றும் 100 உதிரி வைர கற்கள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது.
இது குறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், அதே காம்ப்ளக்சை சேர்ந்த தவுலத்நிசா, லலிதா மற்றும் அழகு ஆகியோர் கூட்டு சேர்ந்து தண்டபாணியின் கடையில் இருந்த வைர நகைகள் மற்றும் வைர கற்களை திருடியது தெரிய வந்தது.
போலீசார் 3 பெண்களையும் கைது செய்து திருட்டு நகைகளை வாங்கிய ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த அழகர்சாமி என்பவரையும் கைது செய்தனர்.






