என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் குளிக்கும் போது தவறிவிழுந்து வடமாநில வாலிபர் பலி
ஈரோடு:
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கிரண்சந்திரா பாரோ.
இவர் ஈரோடு திண்டலில் தங்கி இருந்து கடந்த 1½ மாதமாக கட்டிட வேலை பார்த்து வந்தார். தற்போது திண்டல் லட்சுமிநகரில் நடை பெறும் கட்டிட வேலையில் செய்து கொண்டிருந்தார்.
சம்பவத்தன்று கிரண் சந்திராபாரோ கட்டிடத்தின் 3-வது தளத்தில் வேலை முடித்து விட்டு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது நண்பர் சந்தேகமடைந்து மாடிக்கு சென்று பார்த்தார்.
அப்போது கிரண்சந்திரா பாரோ மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஈரோடு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கிரண்சந்திரா பாரோவை கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கிரண் சந்திராபாரோ பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து அசாமில் உள்ள அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.






