search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பக்கூடல் அருகே வாழைகள் கருகியதால் விவசாயி மாரடைப்பால் மரணம்
    X

    ஆப்பக்கூடல் அருகே வாழைகள் கருகியதால் விவசாயி மாரடைப்பால் மரணம்

    ஆப்பக்கூடல் அருகே வாழைகள் கருகியதால் விவசாயி மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம் பாளையத்தை சேர்ந்தவர் சென்னிமலை (வயது 63).

    இவர் அதே பகுதியில் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழைகள் பயிரிட்டிருந்தார். தனது தோட்டத்தில் 2 போர் போட்டு இருந்தார். ஆனால் 2 போரிலும் தண்ணீர் வரவில்லை.

    தண்ணீர் இல்லாததால் பயிரிடப்பட்டு விளைந்திருந்த வாழைகள் கருக தொடங்கியது.

    இன்று மதியம் 1 மணி அளவில் தோட்டத்துக்கு வந்த சென்னிமலை கருகி இருந்த வாழை மரங்களை பார்த்து மிகவும் வேதனை அடைந்தார்.

    அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலியால் துடித்த அவரை கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×