என் மலர்
செய்திகள்

தேவகோட்டையில் இருசக்கர வாகன திருடன் கைது
தேவகோட்டை:
தேவகோட்டையில் சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வந்தன. மக்கள் அச்சத்துடன் இருந்தார்கள். மருத்துவமனை வாசலில் நிறுத்தப்பட்ட இரண்டுசக்ர வாகனங்கள் திரும்பி வந்து பார்க்கும் போது காணவில்லை, பஸ்நிலையம் அருகில் நிறுத்தி வைத்த வாகனம், ஓட்டல் வாசலில் நிறுத்திய வாகனங்கள் திருடுபோனது.
இச்சம்பவம் குறித்து நகர் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டு. ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில், சார்பு ஆய்வாளர் முகமதுதாரிக், குற்றப்பிரிவு காவலர்கள் மலையரசன், புகழேந்தி, அக்னிஸ்வரன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது தேவகோட்டை பனிப்புலான்வயலை சேர்ந்த பெரியசாமி மகன் ராமலிங்கத்தை கைது செய்தனர்.
அவனிடம் இருந்து ஸ்பிளண்டர் ஒன்று, ஸ்க்கூட்டி ஒன்று, எக்ஸ்.எல் இரண்டு மொத்தம் நான்கு வாகனங்கள் கைப்பற்றினார்கள். சிறப்பாக செயல்பட்ட காவலர்களை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் பாராட்டினார்.






