என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தால் 20 பேர் பலி: கிராம மக்கள் தகவல்
    X

    ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தால் 20 பேர் பலி: கிராம மக்கள் தகவல்

    ‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்தால் வாணக்கன்காடு பகுதியில் 25 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 20 பேர் இறந்துள்ளதாக கிராம மக்கள் கூறி உள்ளனர்.
    புதுக்கோட்டை:

    நெடுவாசல் அருகேயுள்ள வாணக்கன்காடு பகுதி கிராம மக்கள் கூறியதாவது:-

    வாணக்கன்காடு பகுதியில் 1991-ம் ஆண்டு மாரிமுத்து என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஓ.என். ஜி.சி. நிறுவனத்தால் 14 ஆயிரத்து 500 அடி ஆழத்துக்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.



    தொடர்ந்து 1996-ம் ஆண்டு மீண்டும் மாரிமுத்துவிடம் இடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் 2012-ம் ஆண்டு முதல் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடத்தில் இருந்து எண்ணெய் மற்றும் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயுவை சுவாசித்த அந்தப்பகுதி மக்களுக்கு திடீர் மயக்கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    மேலும் குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை சேர்ந்த 25 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் நில உரிமையாளர் மாரிமுத்து, ராமன், வேலன், மூர்த்தி, காமாட்சி உள்பட 10 பேர் இறந்து விட்டனர்.

    இப்போது மாரிமுத்து மனைவி அன்னக்கிளி, செல்வம், சின்னாத்தா உள்பட 15 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 50-க்கும் அதிகமான கால்நடைகளும் பலியாகியுள்ளன.

    அதே போல் கோட்டைக்காடு பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய மேரி, லியோ ஆரோக்கிய மேரி, நேசா, செபஸ்தியான் உள்பட 10 பேர் இறந்துள்ளனர்.

    இதுதவிர இந்தபகுதியில் பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியும், கை கால் முடமாகவும் பிறந்துள்ளன. ஜான்பிரிட்டோ (17), மெட்டிடா மேரி (16) ஆகியோர் மூளை வளர்ச்சியின்றி இருக்கின்றனர். ஆகாஷ் (15) கால் ஊனத்துடன் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×