என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டலில் குடும்ப தகராறில் ஆசிரியைக்கு கத்திக்குத்து: கணவரிடம் போலீசார் விசாரணை
    X

    திண்டலில் குடும்ப தகராறில் ஆசிரியைக்கு கத்திக்குத்து: கணவரிடம் போலீசார் விசாரணை

    திண்டலில் குடும்ப தகராறில் ஆசிரியை கத்தியால் குத்திய கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, திண்டல் லட்சுமி நகரை சேர்ந்தவர் தனசேகர்.கெமிக்கல் கடை வைத்துள்ளார். இவரது மனைவி உமாதேவி.

    உமாதேவி தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்றும் தனசேகருக்கும், உமாதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர் வீட்டில் இருந்த கத்தியால் மனைவி உமாதேவியை சரமாரியாக குத்தினார்.

    இதில் உமாதேவிக்கு கன்னம், வயிறு, நெஞ்சு பகுதியில் கத்திக்குத்தி விழுந்தது. அருகில் இருந்தவர்களை உமாதேவியை சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து தாலுகா போலீசார் தனசேகரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×