என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் ஓயாது: உதயகுமார்
    X

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் ஓயாது: உதயகுமார்

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை இந்த போராட்டம் ஓயாது என கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 14-வது நாளாக பொது மக்கள், மாணவர்கள், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று நடந்த போராட்டத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நடிகர் மன்சூர் அலிகான், ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.


    பின்னர் உதயகுமார் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அரசியல் நிலையற்ற தன்மையாக உள்ளது. குழப்பங்கள் நிறைந்த சூழல் நிலவி வருகிறது. இதனால் போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் உள்ளனர். இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டம் உணவு ஆதாரமாக உள்ளது. இங்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் வற்றி போகும். மன்மோகன்சிங் அரசு என்றாலும், மோடி அரசு என்றாலும் வெளி நாட்டினருக்கு கைக்கூலிகளாக செயல்படுகின்றனர்.

    அணு உலை , மீத்தேன் என எந்த திட்டமாக இருந்தாலும் பாதிப்பு ஏற்படுத்தாது என்கிறார்கள். ஆனால் அவற்றின் மூலம் மிகப் பெரிய பாதிப்புகள் உள்ளது. அரசியல் வாதிகள் சிலர் நன்மை, தீமை பற்றி அறியாமல் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்று கூறுகிறார்கள். இது ஒட்டுமொத்த பொது மக்களை திசை திருப்பும் செயல்.

    15 ஆண்டுகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்போவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் 23 தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எம்.பி. ஒருவரது நிறுவனமும் ஆகும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றும், அதில் 1000கோடி தமிழகத்திற்கு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.

    ஆனால் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றி, பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே 8 கோடி தமிழக மக்களும் ஒன்றிணைந்து இத்திட்டத்தை எதிர்த்து போராட வேண்டும். திட்டத்தை கைவிடும்வரை போராட்டம் ஓயாது.


    இவ்வாறு அவர் கூறினார்.

    பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட் டத்தை மத்திய அரசு கைவிடக்கோரி பொதுமக்கள், மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தின் உணவு களஞ்சியமாக விளங்கும் இந்த இடத்தில் அத்திட்டம் செயல்படுத்தக்கூடாது என்றார்.
    Next Story
    ×