என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூம்புகார் அருகே தீயில் கருகிய பெண் பலி
    X

    பூம்புகார் அருகே தீயில் கருகிய பெண் பலி

    பூம்புகார் அருகே தீயில் கருகிய பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    பூம்புகார் அருகே உள்ள புதுகுப்பத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. கூலி தொழிலாளி. இவரது மனைவி இளமதி (வயது 32). இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி வீட்டில் எரிந்து கொண்டிருந்த மண்ணெய் விளக்கில் கேனில் இருந்த மண்ணெணையை இளமதி ஊற்றினார். அப்போது எதிர்பாராதவிதமாக கேன் தவறி விழுந்து அவர் மீது தீ பற்றியது. இதனை கண்ட கலியமூர்த்தி மனைவியை காப்பாற்ற முயன்றார். இதில் அவரும், அவரது மகன்கள் விக்னேஷ், முகிலன் ஆகியோரும் காயமடைந்தனர்.

    அவர்களை பொதுமக்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இளமதி நேற்று இறந்தார். கலியமூர்த்தி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பூம்புகார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×