என் மலர்
செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: மார்ச் 1-ல் புதுக்கோட்டை முழுவதும் கடையடைப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 1-ல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று அம்மாவட்ட வர்த்தக கழக தலைவர் சின்னப்பா அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட சில பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து அப்பகுதிகளில் பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்தது. நெடுவாசலில் மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 1-ல் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு நடைபெறும் என்று அம்மாவட்ட வர்த்தக கழக தலைவர் சின்னப்பா அறிவித்துள்ளார்.
இதனிடையே, வரும் மார்ச் 1-ம் தேதி போராட்டக் குழுவினர் முதல்வரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, நெடுவாசல் போராட்டத்தில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் கலந்து கொண்டார். போராட்டத்தில்

பேசிய சரத்குமார், தமிழகம் வறட்சியாக உள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் மேலும் வறட்சியை ஏற்படுத்தும் என்று கூறினார்.

போராட்டத்தில் கலந்து கொண்ட இயக்குனர் தங்கர்பச்சான் ஹைட்ரோ கார்பன் போன்ற மக்களுக்கு எதிரான திட்டங்களை தொடர்ந்து எதிர்க்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
Next Story






