என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிமடம் அருகே பைக் விபத்தில் கார் டிரைவர் பலி
    X

    ஆண்டிமடம் அருகே பைக் விபத்தில் கார் டிரைவர் பலி

    ஆண்டிமடம் அருகே பைக் விபத்தில் கார் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயங்கொண்டம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார்நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் புண்ணியகோடி(வயது 60). இவர் தனியார் வாகன ஓட்டுனராக உள்ளார்.

    இவர் கடந்த 19-ம் தேதியன்று தனது உறவினரின் பைக்கை வாங்கிக்கொண்டு பொன்பரப்பியில் நடந்த உறவினர் கருமகாரியத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு செல்வதற்காக ஆண்டிமடம் அருகில் உள்ள கருக்கை பஸ்ஸ்டாப் அருகே இருந்த பேரிகார்டு (இரும்புசாலை தடுப்பு)-ல் பைக் மோதியது,

    இதில் புண்ணியகோடி பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மேல் சிகிச்சைக்காக தஞ்சை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றார்.

    Next Story
    ×