என் மலர்
செய்திகள்

வளர்ச்சி பணிகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சக இணைச்செயலாளர் அப்ரஜிதா சாரங்கி தலைமையில், இயக்குநர் காயா பிரசாத், வல்லுனர் குழுவினர் கோனல் குல்ஷ்ரேஸ்தா, பங்கஜ்டுபேர்கர், நிதேஷ்குமார், ஜிதேந்திர ஆனந்த், விபேக் ஆனந்த், சுமன்ஜித் அய்ச், சதீஷ்ரஞ்சன் சின்கா, விக்ரம் பர்கவா ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஞ்சை அரசன்தாங்கில் ரூ.8.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தையும், களக்காட்டூரில் ரூ.3.50 லட்சம் செலவில் பட்டுப்புழு வளர்ப்பதற்கான மல்பெரி செடி வளர்க்கப்படுவதையும், ரூ.1.64 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.
பின்னர் வெள்ளப்புதூர்- வேடந்தாங்கல் சாலையில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர மரங்கள் நடப்பட்டுள்ளதையும், ரூ.21.85 லட்சம் மதிப்பீட்டில் பசுமைகுடில் நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, நாற்றங் காலில் வளர்க்கப்பட்டுவரும் பல்வேறு செடிகள் குறித்தும், எங்கெங்கு நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளபுதூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மண்புழு உரம் தயாரிக்க மேற்கொள்ளப் பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ரூ.21 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீள் நிரப்புக்குபியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேடந்தாங்கல் ஊராட்சியில் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.
சித்தாத்தூர் கிராம குளம் ரூ.15.45 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதையும், நீர்வரத்து உபரிநீர் செல்ல தேவையான கட்டமைப்பு மற்றும் படிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு அதன் ஆழம், அதில் தேங்கும் தண்ணீரின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தா, மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் முத்து மீனா, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி பணிகள் குறித்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சக இணைச்செயலாளர் அப்ரஜிதா சாரங்கி தலைமையில், இயக்குநர் காயா பிரசாத், வல்லுனர் குழுவினர் கோனல் குல்ஷ்ரேஸ்தா, பங்கஜ்டுபேர்கர், நிதேஷ்குமார், ஜிதேந்திர ஆனந்த், விபேக் ஆனந்த், சுமன்ஜித் அய்ச், சதீஷ்ரஞ்சன் சின்கா, விக்ரம் பர்கவா ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புஞ்சை அரசன்தாங்கில் ரூ.8.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையத்தையும், களக்காட்டூரில் ரூ.3.50 லட்சம் செலவில் பட்டுப்புழு வளர்ப்பதற்கான மல்பெரி செடி வளர்க்கப்படுவதையும், ரூ.1.64 லட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டனர்.
பின்னர் வெள்ளப்புதூர்- வேடந்தாங்கல் சாலையில் ரூ.5.30 லட்சம் மதிப்பீட்டில் சாலையோர மரங்கள் நடப்பட்டுள்ளதையும், ரூ.21.85 லட்சம் மதிப்பீட்டில் பசுமைகுடில் நாற்றாங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, நாற்றங் காலில் வளர்க்கப்பட்டுவரும் பல்வேறு செடிகள் குறித்தும், எங்கெங்கு நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
இதைத்தொடர்ந்து வெள்ளபுதூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் மண்புழு உரம் தயாரிக்க மேற்கொள்ளப் பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ரூ.21 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மீள் நிரப்புக்குபியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வேடந்தாங்கல் ஊராட்சியில் ரூ.8.90 லட்சம் மதிப்பீட்டில் நீர்வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.
சித்தாத்தூர் கிராம குளம் ரூ.15.45 லட்சம் மதிப்பீட்டில் ஆழப்படுத்தப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதையும், நீர்வரத்து உபரிநீர் செல்ல தேவையான கட்டமைப்பு மற்றும் படிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு அதன் ஆழம், அதில் தேங்கும் தண்ணீரின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் கே.பாஸ்கரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் சாந்தா, மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி, ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குநர் முத்து மீனா, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story






