என் மலர்
செய்திகள்

24 மணி நேரமும் அமைச்சர் செங்கோட்டையன் வீடு-அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்.எல்.ஏ. செங்கோட்டையன் வீடு மற்றும் அலுவலகத்துக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் மற்றும் தொகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
மீண்டும் அமைச்சர் ஆக பொறுப்பேற்ற கே.ஏ.செங்கோட்டையன் விரைவில் கோபி வர உள்ளார். இதையொட்டி கோபியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோபி அடுத்த குள்ளம் பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கும், கோபி சத்திய மங்கலம் ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்துக்கும் நேற்று முதல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதேபோல் கோபியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி. சத்தியபாமா எம்.பி. வீடும் கோபி குன்னம்பாளையத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கும் மேலும் கோபியில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த கே.ஏ.செங்கோட்டையன் கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் மற்றும் தொகுதி மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
மீண்டும் அமைச்சர் ஆக பொறுப்பேற்ற கே.ஏ.செங்கோட்டையன் விரைவில் கோபி வர உள்ளார். இதையொட்டி கோபியில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
கோபி அடுத்த குள்ளம் பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கும், கோபி சத்திய மங்கலம் ரோட்டில் உள்ள எம்.எல்.ஏ அலுவலகத்துக்கும் நேற்று முதல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதேபோல் கோபியைச் சேர்ந்த திருப்பூர் எம்.பி. சத்தியபாமா எம்.பி. வீடும் கோபி குன்னம்பாளையத்தில் உள்ளது. அவரது வீட்டுக்கும் மேலும் கோபியில் உள்ள அவரது அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






