என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே நகை பாலீஷ் போடுவதாக மோசடி: வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது
வேதாரண்யம் அருகே நகை பாலீஷ் போடுவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வட மாநிலத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பரிமளா. இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி வந்தார். அவரிடம் பரிமளா தனது ஒரு பவுன் நகையை கொடுத்து பாலீஷ் போட்டு தருமாறு கூறினார்.
அவர் பாலீஷ் போட்டு சென்ற பின் பரிமளா தனது நகையை சரிபார்த்தார். அப்போது ஒரு பவுன் நகையில் 4½ கிராம் மட்டுமே இருந்தது. 3½ கிராம் நகை குறைந்து இருந்தது.
இது குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் நகை பாலீஷ் போட்டு தருவதாக கூறியவரை பிடித்து கரியாப்பட்டினம் போலீசில் ஓப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த குபோந்த் குமார் யாதவ் என்பது தெரிய வந்தது.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கத்தரிப்புலம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி பரிமளா. இவர் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் நகைக்கு பாலீஷ் போடுவதாக கூறி வந்தார். அவரிடம் பரிமளா தனது ஒரு பவுன் நகையை கொடுத்து பாலீஷ் போட்டு தருமாறு கூறினார்.
அவர் பாலீஷ் போட்டு சென்ற பின் பரிமளா தனது நகையை சரிபார்த்தார். அப்போது ஒரு பவுன் நகையில் 4½ கிராம் மட்டுமே இருந்தது. 3½ கிராம் நகை குறைந்து இருந்தது.
இது குறித்து அவர் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் நகை பாலீஷ் போட்டு தருவதாக கூறியவரை பிடித்து கரியாப்பட்டினம் போலீசில் ஓப்படைத்தார். சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த குபோந்த் குமார் யாதவ் என்பது தெரிய வந்தது.
அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






