என் மலர்
செய்திகள்

திருப்போரூர் அருகே 3 வீடுகளில் நகை கொள்ளை
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த காயார் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய தம்பி கோதண்ட பாணி. இருவரும் அடுத்தடுத்து வீட்டில் வசித்து வருகிறார்கள்.
நேற்று காலை 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு வயலுக்கு சென்றனர். அவர்களது மனைவிகளும் வெளியில் வேலைக்கு சென்று விட்டனர். சாவியை வீட்டு முன்பு மறைத்து வைத்திருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மாலையில் பெருமாளும், கோதண்டபாணியும் திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பெருமாள் வீட்டின் பீரோவில் இருந்த 30 பவுன் தங்க நகைகளை காணவில்லை. கோதண்டபாணி வீட்டில் இருந்த ஒரு பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
ஏரிக்கரை தெருவில் உள்ள மணி வீட்டிலும் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து 9 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர்.
ஒரே நாளில் பட்டப்பகலில் 3 வீடுகளில் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காயார் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






