என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராலிமலை ஊராட்சியில் ரூ.8.9 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் ஆய்வு
    X

    விராலிமலை ஊராட்சியில் ரூ.8.9 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சிப்பணிகள்: கலெக்டர் ஆய்வு

    விராலிமலை ஊராட்சியில் ரூ. 8.9 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

    தமிழக அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல் படுத்தி வருகிறது. அதனடிப் படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், கத்தலூர் ஊராட்சி, மு.மேலப் பட்டியில் பொது நிதியின் கீழ் ரூ.85000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கைப்பம்பு பணியையும், தனிநபர் இல்லக்கழிவறை கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.12000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 கழிவறைகள் கட்டுமானப்பணியையும், வாணத்திராயன்பட்டி ஊராட்சி, அத்திப்பள்ளம் மற்றும் ஜெயமங்கலத்தில் தலா ரூ.3.50 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட்ட 2 நீர்த்தேக்கத்தொட்டிகள் பணியையும் என மொத்தம் ரூ.8.09 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சிப்பணிகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    மேலும் அவ்வை யார்பட்டி, பேராம்பூர் ஆகிய பகுதிகளில் வேலிக்கருவை அகற்றும் பணிகள் பார்வையிட்டும், இராஜகிரி ஊராட்சி, முல்லையூர் அணைக்கட்டும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த ஆய்வின் போது ஊராட்சிகள் மற்றும் முல்லையூர் அணைக் கட்டில் உள்ள வேலிக்கருவை மரங்களை முற்றிலுமாக அகற் றவும், நீர்த்தேக்கத் தொட்டிகளிலிருந்து பொதுமக்களுக்கு கூடுதல் குடிநீர் இணைப்புகள் வழங்கவும், தனிநபர் இல்லக்கழிவறைகளை தினமும் நீர் ஊற்றி உரிய முறையில் பயன்படுத்தவும், மேலும் நடைபெறும் பணி களை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு விரைவாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு கொண்டு வரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் கணேஷ் கூறினார்.

    இந்த ஆய்வின் போது இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் வடிவேல் பிரபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், செல்வராஜ், உதவிப் பொறியாளர் சித்திரவேல் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×