என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரச்சலூர் அருகே மனைவி பிரிந்த துக்கத்தில் மில் மேலாளர் தற்கொலை
    X

    அரச்சலூர் அருகே மனைவி பிரிந்த துக்கத்தில் மில் மேலாளர் தற்கொலை

    கணருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வேதனையில் இருந்த மில் மேலாளர் தற்கொலை செய்து கொண்டார்.

    அரச்சலூர்:

    அரச்சலூர் அருகே உள்ள பூந்துறை பூவாண்டி வலசு பகுதியை சேர்ந்தவர் முனிராஜ்(வயது33). இவர் கோவை அருகே கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மில்லில் மேலாளர் ஆக பணி புரிந்து வந்தார்.

    இவரது மனைவி அனிதா(32) கர்நாடக மாநிலம் கொள்னே காலை சேர்ந்தவர். 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    கணவர்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி அனிதா கணவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். மனைவி சென்றதிலிருந்து முனிராஜ் வருத்தத்துடன் காணப்பட்டார்.

    இந்நிலையில் வீட்டில் இருந்த முனிராஜ் வி‌ஷம் குடித்ததாக கூறப்படுகிறது.இதனால் வாந்தி எடுத்த அவரை தாயார் பாவாயி மற்றும் உறவினர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முனிராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×