என் மலர்
செய்திகள்

கோரிக்கைகள் வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தர்ணா போராட்டம்
ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஈரோடு:
ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமநிலை வேலை சமநிலை ஊதியம் வழங்க வேண்டும். அரசு அறிவித்த உயர் ஊதியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் பழனி சாமி, பி.எஸ்.என்.எல். உழியர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
ஈரோடு காந்தி ஜி ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சமநிலை வேலை சமநிலை ஊதியம் வழங்க வேண்டும். அரசு அறிவித்த உயர் ஊதியத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது. இதில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கண்ணுசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் பழனி சாமி, பி.எஸ்.என்.எல். உழியர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story






