என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 24-ந்தேதி நடக்கிறது
    X

    புதுக்கோட்டையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 24-ந்தேதி நடக்கிறது

    புதுக்கோட்டை மாவட்டத்தில் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், எரிவாயு இணைப்பு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வருகிற 24-ந்தேதி தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு, எரிவாயு சிலிண்டர் நிரப்ப பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள் மற்றும் எரிவாயு சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம் போன்ற குறைபாடுகள் குறித்து வரப்பெறும் புகார்களைப்பெற்று உரிய நடவடிக்கைகள் எடுத்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் இக்குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் வருகிற 24-ந் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே, எரிவாயு இணைப்பு குறித்து தங்களது குறைகளை தெரிவிக்க விரும்பும் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரில் தெரிவிக்கலாம்.

    மேற்காணும் தகவலை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×