என் மலர்
செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பல்கலைக்கழக பேராசிரியரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் கல்வியியல் துறை தலைவராக பணிபுரிந்து வருபவர் அருணாசலம் (வயது 47).
இவர், மாணவிகளை கோவா, மற்றும் கன்னியாகுமரிக்கு கல்விச்சுற்றுலாவாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மாணவிகளிடம் ஆபாச படங்களை காண்பித்தும், செல்போனில் ஆபாச படங்களை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பல்கலைக்கழக வகுப்பு அறையிலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுபற்றி இதழியல் துறை மாணவ, மாணவிகள் காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயனிடம் புகார் செய்தனர்.
அதன் பேரில் பேராசிரியர் அருணாசலம் மீது பெண் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வாழ்நாள் கல்வியியல் துறை தலைவராக பணிபுரிந்து வருபவர் அருணாசலம் (வயது 47).
இவர், மாணவிகளை கோவா, மற்றும் கன்னியாகுமரிக்கு கல்விச்சுற்றுலாவாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மாணவிகளிடம் ஆபாச படங்களை காண்பித்தும், செல்போனில் ஆபாச படங்களை அனுப்பியும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பல்கலைக்கழக வகுப்பு அறையிலும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுபற்றி இதழியல் துறை மாணவ, மாணவிகள் காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயனிடம் புகார் செய்தனர்.
அதன் பேரில் பேராசிரியர் அருணாசலம் மீது பெண் வன்கொடுமை, பாலியல் தொல்லை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
Next Story






