என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
    X

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சத்துணவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் இன்று முதல் மார்ச் 7-ம் தேதிவரை விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×