என் மலர்
செய்திகள்

ரெயில் நிலையத்தில் ஆயுதப்படை பெண் போலீஸ் மாயம்
சிவகங்கை ரெயில் நிலையத்தில் ஆயுதப்படை பெண் போலீஸ் மாயமான சம்பவம் குறித்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, கீழபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 25). புதுக்கோட்டையில் ஆயுதப்படை போலீஸ் காரராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் ராமநாதன் வெளி நாட்டில் இருந்து கீழபசலை கிராமத்திற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகா, தனது சகோதரருடன் புதுக்கோட்டையில் இருந்து மானாமதுரைக்கு ரெயிலில் புறப்பட்டார்.
சிவகங்கை ரெயில் நிலையத்தில் இறங்கிய கார்த்திகா பாத்ரூம் சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது கணவர் சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து, மாயமான கார்த்திகாவை தேடி வருகிறார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தாலுகா, கீழபசலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமநாதன். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (வயது 25). புதுக்கோட்டையில் ஆயுதப்படை போலீஸ் காரராக பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்பு கணவர் ராமநாதன் வெளி நாட்டில் இருந்து கீழபசலை கிராமத்திற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகா, தனது சகோதரருடன் புதுக்கோட்டையில் இருந்து மானாமதுரைக்கு ரெயிலில் புறப்பட்டார்.
சிவகங்கை ரெயில் நிலையத்தில் இறங்கிய கார்த்திகா பாத்ரூம் சென்று வருவதாக கூறிச் சென்றவர் பின்னர் திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது கணவர் சிவகங்கை டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து, மாயமான கார்த்திகாவை தேடி வருகிறார்.
Next Story






