என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெங்களூர் சிறையில் தீர்ப்பு நகல் வழங்கியதும் சசிகலா சரண் அடைகிறார்
சொத்து குவிப்பு வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்கள் உடனே சரண் அடைய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தற்போது சசிகலா கூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ.க்களுடன் தங்கி உள்ளார். விடுதியை சுற்றிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பை கேட்டதும் சசிகலா அதிர்ச்சி அடைந்தார். அவர் சரண் அடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நகல் பெங்களூர் பரப்பன அக்ரஹார ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அதன்பிறகு ஜெயிலில் இருந்து சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் சம்மன் அனுப்பப்படும்.
இதேபோல் சுப்ரீம் கோர்ட்டு நகலும் சசிகலாவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இன்று பிற்பகலில் தீர்ப்பு நகல்கள் வழங்கும் நடைமுறை தொடங்கும். ஓரிரு நாளில் அவர்கள் சரண் அடைகிறார்கள். 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தீர்ப்பினால் சசிகலா மனச்சோர்வு அடைந்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்