என் மலர்
செய்திகள்

சிறுவலூர் அருகே தொழிலாளி தற்கொலை
சிறுவலூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோபி அடுத்த சிறுவலூர் அருகே உள்ள காமராஜபுரம் ஆண்டிக்காடு என்ற இடத்தை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 80). தொழிலாளி. நோய் கொடுமையால் பாதிக்கப்பட்ட இவர் விஷ மாத்திரையை தின்று மயங்கிய நிலையில் கிடந்தார். இதனால் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட வெள்ளியங்கிரி சிகிச்சை பலன் இல்லாமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






