என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கைலாஷ் சத்தியார்த்தி வீட்டில் திருட்டுபோன நோபல் சான்றிதழ் மீட்பு: 3 பேர் கைது
Byமாலை மலர்12 Feb 2017 10:26 AM GMT (Updated: 12 Feb 2017 10:26 AM GMT)
நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தியின் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு, நோபல் பரிசு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை:
இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோர் இணைந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றனர். சமூக ஆர்வலரான சத்யார்த்தி இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காக போராடி வருகிறார்.
கைலாஷ் சத்யார்த்தியின் வீடு டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது. அவர் அமைதிக்கான நோபல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொலம்பியா சென்றிருந்த நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டினுள் புகுந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். அவரது நோபல் பரிசு சான்றிதழும் இதில் அடங்கும். இதேபோல் அப்பகுதியில் உள்ள மேலும் 2 வீடுகளில் பொருட்கள் கொள்ளைபோனது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் திருடிச் சென்ற அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். எனவே, கைலாஷ் சத்தியார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழும் மீட்கப்பட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த குழந்தைகள் உரிமை ஆர்வலரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தானின் மலாலா ஆகியோர் இணைந்து 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றனர். சமூக ஆர்வலரான சத்யார்த்தி இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புக்காக போராடி வருகிறார்.
கைலாஷ் சத்யார்த்தியின் வீடு டெல்லியின் தென்கிழக்கு பகுதியில் உள்ளது. அவர் அமைதிக்கான நோபல் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கொலம்பியா சென்றிருந்த நேரத்தில் மர்ம ஆசாமிகள் வீட்டினுள் புகுந்து நகை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர். அவரது நோபல் பரிசு சான்றிதழும் இதில் அடங்கும். இதேபோல் அப்பகுதியில் உள்ள மேலும் 2 வீடுகளில் பொருட்கள் கொள்ளைபோனது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் திருடிச் சென்ற அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர். எனவே, கைலாஷ் சத்தியார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழும் மீட்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X