என் மலர்
செய்திகள்

கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை தூக்கில் தொங்கினார்
ஈரோட்டில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு, சூரம்பட்டி வலசு, ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சதீஷ்(வயது23). இவரது மனைவி திவ்யபாராதி. சதீஷ் அக்காவின் திருமணத்திற்காக தனது அப்பாவின் பெயரில் இருந்த நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி உள்ளார்.
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மன வேதனையில் இருந்தார். அவருக்கு அவரது மனைவி திவ்யபாரதி ஆறுதல் கூறி வந்தார்.
இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சதீஷ் தனது மனைவி சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






