என் மலர்
செய்திகள்

ஈரோடு அருகே புதுப்பட சி.டி.க்களை விற்ற 2 பேர் கைது
ஈரோடு அருகே புதுப்பட சி.டி.க்களை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.புதுப்பட சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஈரோடு:
ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது முனிசிபல் காலனியில் உள்ள ஒரு கடையில் புதுப்பட சி.டி.கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையொட்டிஈரோடு பெரியவலசு, கொங்குநகரை சேர்ந்த மாதேஷ்(வயது21) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து மணல்கயிறு, அதே கண்கள், பலம், சிவப்பு எனக்கு பிடிக்கும், போன்ற புதுப்பட சி.டி.க்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று மற்றொரு கடையில் நடந்த சோதனனயிலும் புதுப்பட சி.டி,க்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இது தொடர்பாக சம்பத் நகரை சுரேஷ்குமார்(24), என்பவரையும் வீரப்பன் சத்திரம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்தும் புதுப்பட சி.டி.கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Next Story