என் மலர்
செய்திகள்

கீழ்வேளூர் அருகே பூ வியாபாரி கழுத்தை அறுத்து கொலை
கீழ்வேளூர்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் குமரவேல்(வயது 40) பூ வியாபாரி. இவருக்கு திருமணம் ஆகி கஸ்தூரி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து கணவரிடம் விவாகரத்து கேட்டு கஸ்தூரி வழக்கு தொடர்ந்தார். இருந்த போதிலும் அவர்கள் ஒன்றாக வசித்து வந்தனர். இதற்கு இடையே கீழ்வேளூர் ஓடம்போக்கி ஆற்றின் படித்துறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் குமரவேல் பிணமாக கிடந்தார்.
இது பற்றிய தகவல் கிடைத்ததும் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமரவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரவேல் கொலைக்கு அவரது மனைவி கஸ்தூரி காரணமா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள். குமரவேலை வேறு நபர்கள் கொலை செய்தார்களா?என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கீழ்வேளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






