என் மலர்
செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் 11-ந் தேதி நடக்கிறது
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் கூட்டம் 11-ந் தேதி நடைபெறுவதாக மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ஆம் வாரத்தில் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1மணி வரை அந்தக் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் பொருட்டு தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பிப்ரவரி -2017-ஆம் மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் 2-வது சனிக்கிழமை(11.02.2017) அன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவுச் சங்க தனி அலுவலர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரால், துணை ஆட்சியர் நிலையில் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் பார்வையாளராக இருப்பார்.
புதுக்கோட்டை வட்டம் மாத்தூர் கிராமம், ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் திருமயம் வட்டம் கோட்டையூர் கிராமம், குளத்தூர் வட்டம் பேராம்பூர் கிராமம், இலுப்பூர் வட்டம் புதூர் கிராமம், கந்தர்வகோட்டை வட்டம் பகட்டுவான்பட்டி கிராமம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு கிராமம், ஆவுடையார்கோவில் வட்டம் கரூர் கிராமம், மணமேல்குடி வட்டம் ஆவுடையார்பட்டினம் கிராமம், பொன்னமராவதி வட்டம் மரவாமதுரை கிராமம், கறம்பக்குடி வட்டம் காட்டாத்தி கிராமம், விராலிமலை வட்டம் பொய்யாமணி கிராமம்.
மேற்படி கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம்.
மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ஆம் வாரத்தில் சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 1மணி வரை அந்தக் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டைகள், நியாயவிலைக் கடை தொடர்பான குறைகள் தீர்க்கும் பொருட்டு தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
பிப்ரவரி -2017-ஆம் மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம் 2-வது சனிக்கிழமை(11.02.2017) அன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொடர்புடைய கூட்டுறவுச் சங்க தனி அலுவலர், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரால், துணை ஆட்சியர் நிலையில் நியமிக்கப்படும் அலுவலர் ஒருவர் பார்வையாளராக இருப்பார்.
புதுக்கோட்டை வட்டம் மாத்தூர் கிராமம், ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் திருமயம் வட்டம் கோட்டையூர் கிராமம், குளத்தூர் வட்டம் பேராம்பூர் கிராமம், இலுப்பூர் வட்டம் புதூர் கிராமம், கந்தர்வகோட்டை வட்டம் பகட்டுவான்பட்டி கிராமம், அறந்தாங்கி வட்டம் மேற்பனைக்காடு கிராமம், ஆவுடையார்கோவில் வட்டம் கரூர் கிராமம், மணமேல்குடி வட்டம் ஆவுடையார்பட்டினம் கிராமம், பொன்னமராவதி வட்டம் மரவாமதுரை கிராமம், கறம்பக்குடி வட்டம் காட்டாத்தி கிராமம், விராலிமலை வட்டம் பொய்யாமணி கிராமம்.
மேற்படி கூட்டத்தில் பொதுமக்கள், குறிப்பாக குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் தங்களுக்குள்ள இடர்பாடுகள் குறித்து எடுத்துக்கூறி பயன் பெறலாம்.
மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story






