என் மலர்
செய்திகள்

புயல் சேதங்கள் சீரமைப்பு: வண்டலூர் பூங்கா நாளை திறப்பு
வர்தா புயலால் சேதம் அடைந்த வண்டலூர் பூங்கா நாளை திறக்கப்படுகிறது.
செங்கல்பட்டு:
கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி வர்தா புயல் சென்னையை தாக்கியது. இதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடும் சேதம் ஏற்பட்டது. பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. விலங்குகள் அடைப்பிடங்கள், பார்வையாளர்கள் செல்லும் இடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.
இதையடுத்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்தது. சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பூங்காவில் ஒரு இடத்தில் குவித்து வைத்தனர். விலங்குகள் இருப்பிடங்கள் சீரமைக்கப்பட்டு வந்தது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு பூங்கா திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாததால் பொங்கலுக்கு பூங்கா திறக்கப்படவில்லை.
கடந்த 2 மாதங்களாக சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. தற்போது பணிகள் முழுமையாக முடிந்தது. மரக்கழிவுகள் அகற்றப்பட்டது. குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டன.
பார்வையாளர்கள் செல்லும் பாதைகளும் சரி செய்யப்பட்டன. இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என்று பூங்கா இயக்குனர் தெரிவித்தார்.
இதற்காக விலங்குகள் அதன் இருப்பிடங்களில் அடைக்கப்பட்டு உள்ளன. 2 மாதங்களுக்கு பிறகு பூங்கா திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் 12-ந்தேதி வர்தா புயல் சென்னையை தாக்கியது. இதில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடும் சேதம் ஏற்பட்டது. பூங்காவில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. விலங்குகள் அடைப்பிடங்கள், பார்வையாளர்கள் செல்லும் இடங்கள் கடுமையாக சேதம் அடைந்தன.
இதையடுத்து பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்தது. சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி பூங்காவில் ஒரு இடத்தில் குவித்து வைத்தனர். விலங்குகள் இருப்பிடங்கள் சீரமைக்கப்பட்டு வந்தது.
இதனால் பொங்கல் பண்டிகைக்கு பூங்கா திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சீரமைப்பு பணிகள் முழுமையாக முடியாததால் பொங்கலுக்கு பூங்கா திறக்கப்படவில்லை.
கடந்த 2 மாதங்களாக சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வந்தது. தற்போது பணிகள் முழுமையாக முடிந்தது. மரக்கழிவுகள் அகற்றப்பட்டது. குடிநீர், கழிவறை வசதிகள் செய்யப்பட்டன.
பார்வையாளர்கள் செல்லும் பாதைகளும் சரி செய்யப்பட்டன. இதையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறக்கப்படும் என்று பூங்கா இயக்குனர் தெரிவித்தார்.
இதற்காக விலங்குகள் அதன் இருப்பிடங்களில் அடைக்கப்பட்டு உள்ளன. 2 மாதங்களுக்கு பிறகு பூங்கா திறக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Next Story






