என் மலர்
செய்திகள்

தனது மகள்–மகனுக்கு தடுப்பூசி போட்டு முகாமை தொடங்கி வைத்த கலெக்டர்
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற தட்டம்மை தடுப்பூசி முகாமில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தன்னுடைய மகன்–மகளுக்கு ஊசி போட்டு கலெக்டர் மலர்விழி முகாமை தொடங்கி வைத்தார்.
சிவகங்கை:
தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு 9 மாத குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை நடத்துகிறது. மாநிலம் முழுவதும் இந்த முகாம் நேற்று 6–ந்தேதி தொடங்கி வருகிற 28–ந்தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த முகாம் தொடக்க விழா சிவகங்கையை அடுத்த சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள மான்போர்டு பப்ளிக் பள்ளி மற்றும் சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி வரவேற்று பேசினார். சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள மான் போர்டு பப்ளிக் பள்ளியில் படிக்கும் தன்னுடைய மகள்–மகனுக்கு முதன் முதலில் தட்டம்மை தடுப்பூசியை போட்டு கலெக்டர் மலர்விழி முகாமை தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–
தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் ஊசியை என்னுடைய மகள்–மகனுக்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊசியை ஏற்கனவே போட்டிருந்தாலும் மீண்டும் போடலாம். பொதுவாக காய்ச்சல் வந்த பின்னர் மருந்து கொடுப்பதை விட, வரும்முன்னர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகளை நன்றாக கழுவ வேண்டும். நாம் சாதாரணமாக கழுவுவது போன்று அல்லாமல், டாக்டர் அறிவுரையின்படி கைக்கழுவுதல் வேண்டும். இப்படி செய்தால் பன்றிக்காய்ச்சல் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் இருக்கும். பொதுவாக ஆசிரியர்கள் சொல்வது தான், மாணவ–மாணவிகளுக்கு வேதவாக்காக இருக்கும். இதனால் தான் ஆசிரியர்கள் மூலம் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் தட்டம்மை தடுப்பூசி கடந்த 1985–ம் ஆண்டு முதல் போடப்பட்டு வருகிறது. என்வே இந்த தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் போட்டால் ரூ.800 ஆகும். ஆனால் அரசு இலவசமாக கொடுக்கிறது. இதனால் பக்கவிளைவு எதுவும் கிடையாது. தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் டாக்டர் பரூக் அப்தல்லா கை கழுவும் முறை குறித்த செயல்விளக்கத்தை செய்துகாட்டினார். மேலும் இதில் மருத்துவ கல்லூரி டீன் சவுந்திரராஜன் முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ்குமார், துணை இயக்குனர் ராம பாண்டியன், தலைமை ஆசிரியர்(பொறுப்பு) பழனியப்பன், மாவட்ட சமூகநல அதிகாரி உமையாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
இதேபோல் சிங்கம்புணரியில் பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை சுகாதார பணிகள் இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள்மணி தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் நமீசாபானு முன்னிலை வகித்தார். டாக்டர்கள் சுபசங்கரி, செந்தில்குமார் ஆகியோர் மாணவ–மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கமலேஸ்வரன் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டார். திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தமீம் அன்சாரி, சண்முகநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுதா, தேவகோட்டை அக்பர் தெரு அங்கன்வாடி உதவியாளர் சரளா ஆகியோர் மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக எடுத்து கூறினர்.
தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோயை முற்றிலும் ஒழிக்க தமிழக அரசு 9 மாத குழந்தைகள் முதல் 15 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் முகாமை நடத்துகிறது. மாநிலம் முழுவதும் இந்த முகாம் நேற்று 6–ந்தேதி தொடங்கி வருகிற 28–ந்தேதி வரை நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த முகாம் தொடக்க விழா சிவகங்கையை அடுத்த சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள மான்போர்டு பப்ளிக் பள்ளி மற்றும் சிவகங்கையில் உள்ள மன்னர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி வரவேற்று பேசினார். சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள மான் போர்டு பப்ளிக் பள்ளியில் படிக்கும் தன்னுடைய மகள்–மகனுக்கு முதன் முதலில் தட்டம்மை தடுப்பூசியை போட்டு கலெக்டர் மலர்விழி முகாமை தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு
பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–
தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதல் ஊசியை என்னுடைய மகள்–மகனுக்கு போடப்பட்டுள்ளது. இந்த ஊசியை ஏற்கனவே போட்டிருந்தாலும் மீண்டும் போடலாம். பொதுவாக காய்ச்சல் வந்த பின்னர் மருந்து கொடுப்பதை விட, வரும்முன்னர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க கைகளை நன்றாக கழுவ வேண்டும். நாம் சாதாரணமாக கழுவுவது போன்று அல்லாமல், டாக்டர் அறிவுரையின்படி கைக்கழுவுதல் வேண்டும். இப்படி செய்தால் பன்றிக்காய்ச்சல் இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் இருக்கும். பொதுவாக ஆசிரியர்கள் சொல்வது தான், மாணவ–மாணவிகளுக்கு வேதவாக்காக இருக்கும். இதனால் தான் ஆசிரியர்கள் மூலம் நோய் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் தட்டம்மை தடுப்பூசி கடந்த 1985–ம் ஆண்டு முதல் போடப்பட்டு வருகிறது. என்வே இந்த தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் போட்டால் ரூ.800 ஆகும். ஆனால் அரசு இலவசமாக கொடுக்கிறது. இதனால் பக்கவிளைவு எதுவும் கிடையாது. தடுப்பூசி முற்றிலும் பாதுகாப்பானது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் டாக்டர் பரூக் அப்தல்லா கை கழுவும் முறை குறித்த செயல்விளக்கத்தை செய்துகாட்டினார். மேலும் இதில் மருத்துவ கல்லூரி டீன் சவுந்திரராஜன் முதன்மைக்கல்வி அதிகாரி செந்திவேல்முருகன், சுகாதாரத்துறை இணை இயக்குனர் சுரேஷ்குமார், துணை இயக்குனர் ராம பாண்டியன், தலைமை ஆசிரியர்(பொறுப்பு) பழனியப்பன், மாவட்ட சமூகநல அதிகாரி உமையாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி
இதேபோல் சிங்கம்புணரியில் பாரிவள்ளல் மேல்நிலைப்பள்ளியில் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமை சுகாதார பணிகள் இயக்குனரின் நேர்முக உதவியாளர் அருள்மணி தொடங்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர் நமீசாபானு முன்னிலை வகித்தார். டாக்டர்கள் சுபசங்கரி, செந்தில்குமார் ஆகியோர் மாணவ–மாணவிகளுக்கு தடுப்பூசி போட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளி நிர்வாகம் செய்திருந்தது.
தேவகோட்டை
தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளியில் தட்டம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பள்ளி ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர் கமலேஸ்வரன் மாணவர்களுக்கு தடுப்பூசி போட்டார். திருவேகம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் தமீம் அன்சாரி, சண்முகநாதபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சுதா, தேவகோட்டை அக்பர் தெரு அங்கன்வாடி உதவியாளர் சரளா ஆகியோர் மாணவர்களுக்கு தடுப்பூசி தொடர்பாக எடுத்து கூறினர்.
Next Story






