என் மலர்
செய்திகள்

கீழக்கொளத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு
அரியலூரில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கீழக்கொளத்தூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 220 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் நேரடியாக அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
திருமானூரை அடுத்த கீழக்கொளத்தூர் கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், கீழக்கொளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தைப்பூச தினமான வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) கீழக்கொளத்தூரில் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட காவல் துறை, வருவாய் துறை, கால்நடை துறை அதிகாரிகளிடம் முறைப்படி மனு அளித்துள்ளோம். ஆனால் பல்வேறு காரணங்களை கூறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதனால் எங்கள் ஊர் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்புடன் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். எனவே மாவட்ட கலெக்டர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியில் இருந்து ஒருவருக்கு பெட்டிக்கடை வைக்க ரூ.20 ஆயிரம், ஒருவருக்கு கறவை மாடு வாங்க ரூ.20 ஆயிரம், புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 69 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.1 கோடியே 96 லட்சத்து 12 ஆயிரத்துக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரெங்கராஜன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு தி்ட்டம்) மங்கலம், புதுவாழ்வு திட்ட மேலாளர் முத்துவேல், தாட்கோ திட்ட மேலாளர் கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 220 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் நேரடியாக அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
திருமானூரை அடுத்த கீழக்கொளத்தூர் கிராம மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் அளித்த மனுவில், கீழக்கொளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, தைப்பூச தினமான வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) கீழக்கொளத்தூரில் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட காவல் துறை, வருவாய் துறை, கால்நடை துறை அதிகாரிகளிடம் முறைப்படி மனு அளித்துள்ளோம். ஆனால் பல்வேறு காரணங்களை கூறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அதிகாரிகள் எங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து விட்டனர். இதனால் எங்கள் ஊர் மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் கிராமத்தில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை பாதுகாப்புடன் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம். எனவே மாவட்ட கலெக்டர் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் தன்விருப்ப நிதியில் இருந்து ஒருவருக்கு பெட்டிக்கடை வைக்க ரூ.20 ஆயிரம், ஒருவருக்கு கறவை மாடு வாங்க ரூ.20 ஆயிரம், புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் 69 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடனாக ரூ.1 கோடியே 96 லட்சத்து 12 ஆயிரத்துக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ரெங்கராஜன், துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு தி்ட்டம்) மங்கலம், புதுவாழ்வு திட்ட மேலாளர் முத்துவேல், தாட்கோ திட்ட மேலாளர் கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






