என் மலர்
செய்திகள்

ஸ்ரீமுஷ்ணம் அருகே கோர்ட்டு ஊழியருக்கு கொலை மிரட்டல்: தந்தை-மகன் கைது
ஸ்ரீமுஷ்ணம் அருகே கோர்ட்டு ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்த தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சின்னஆத்து குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ஜூணன் (வயது 45) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பான வழக்கு விருத்தாசலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. விருத்தாசலம் கோர்ட்டில் ஊழியராக சின்ன ஆத்துகுறிச்சியை சேர்ந்த வேல்முருகன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் இந்த வழக்கு சம்பந்தமான தகவல்களை காசிலிங்கத்துக்கு கூறுவதாக அர்ஜூணன் நினைத்தார். இதையடுத்து அர்ஜூணன் தனது மகன் குணசேகரன் (29), மருமகள் கற்பகவள்ளி (26) ஆகியோருடன் வேல்முருகன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு வேல்முருகன், அவரது மனைவி வசந்தி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம், வழக்கு சம்பந்தமான தகவல்களை எதற்காக காசிலிங்கத்திடம் கூறுகிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அர்ஜூணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து வேல்முருகன், அவரது மனைவி வசந்தி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து வசந்தி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து அர்ஜூணன், அவரது மகன் குணசேகரன் ஆகியோரை கைது செய்தனர். கற்பகவள்ளியை தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள சின்னஆத்து குறிச்சி பகுதியை சேர்ந்தவர் காசிலிங்கம். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அர்ஜூணன் (வயது 45) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது தொடர்பான வழக்கு விருத்தாசலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. விருத்தாசலம் கோர்ட்டில் ஊழியராக சின்ன ஆத்துகுறிச்சியை சேர்ந்த வேல்முருகன் (45) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் இந்த வழக்கு சம்பந்தமான தகவல்களை காசிலிங்கத்துக்கு கூறுவதாக அர்ஜூணன் நினைத்தார். இதையடுத்து அர்ஜூணன் தனது மகன் குணசேகரன் (29), மருமகள் கற்பகவள்ளி (26) ஆகியோருடன் வேல்முருகன் வீட்டிற்கு சென்றார்.
அங்கு வேல்முருகன், அவரது மனைவி வசந்தி ஆகியோர் இருந்தனர். அவர்களிடம், வழக்கு சம்பந்தமான தகவல்களை எதற்காக காசிலிங்கத்திடம் கூறுகிறீர்கள்? என்று கேட்டு வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அர்ஜூணன் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து வேல்முருகன், அவரது மனைவி வசந்தி ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து வசந்தி கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் செய்தார். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து அர்ஜூணன், அவரது மகன் குணசேகரன் ஆகியோரை கைது செய்தனர். கற்பகவள்ளியை தேடி வருகின்றனர்.
Next Story






