என் மலர்
செய்திகள்

டி.என்.பாளையம் அருகே தாய் திட்டியதால் இளம்பெண் தற்கொலை
டி.என்.பாளையம் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
டி.என்.பாளையம்:
கடம்பூரை அடுத்த கோட்டமாளம் காடுபசுவன்மாளம் அருகே உள்ள நீர்க்குண்டி புதூரை சேர்ந்தவர் சன்னத்தாயி(30).
இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சதீஷ்,சஞ்சய் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சன்னத்தாயிக்கும் அவரது அம்மாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் சன்னத்தாயை அவரது அம்மா திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சன்னத்தாய் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து குடித்தார்.
இது குறித்து சன்னத்தாயி தனது தாயிடம் நான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சன்னத்தாயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக கடம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடம்பூரை அடுத்த கோட்டமாளம் காடுபசுவன்மாளம் அருகே உள்ள நீர்க்குண்டி புதூரை சேர்ந்தவர் சன்னத்தாயி(30).
இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு சதீஷ்,சஞ்சய் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். சன்னத்தாயிக்கும் அவரது அம்மாவிற்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்றும் சன்னத்தாயை அவரது அம்மா திட்டியதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த சன்னத்தாய் வீட்டில் இருந்த சாணிப்பவுடரை எடுத்து குடித்தார்.
இது குறித்து சன்னத்தாயி தனது தாயிடம் நான் விஷம் குடித்து விட்டதாக கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
சன்னத்தாயை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக கடம்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






