என் மலர்
செய்திகள்

கொப்பம்பட்டி அருகே குடி போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய விவசாயி பலி
குடி போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிய விவசாயி புளியமரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
கொப்பம்பட்டி:
கொப்பம்பட்டி அருகே வயிறிசெட்டிப்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40) விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளில் துறையூருக்கு சென்றுள்ளார்.
உப்பிலியபுரம் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகன விளக்கின் வெளிச்சம் அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள புளியமரத்தில் மோதினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சம்பவம் குறித்து அறிந்த உப்பிலியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொப்பம்பட்டி அருகே வயிறிசெட்டிப்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40) விவசாயி. மது குடிக்கும் பழக்கம் உடையவர். இவர் குடிபோதையில் தனது மோட்டார் சைக்கிளில் துறையூருக்கு சென்றுள்ளார்.
உப்பிலியபுரம் போலீஸ் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த வாகன விளக்கின் வெளிச்சம் அதிகமாக இருந்ததால் நிலை தடுமாறி சாலை ஓரம் உள்ள புளியமரத்தில் மோதினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
சம்பவம் குறித்து அறிந்த உப்பிலியபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






