என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பழூர் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தூக்குபோட்டு தற்கொலை
    X

    தா.பழூர் அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தூக்குபோட்டு தற்கொலை

    தா.பழூர் அருகே தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    தா.பழூர்:

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு (வயது 40) வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பினார்.

    பின்னர் அதே பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான  நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். இந்த நிலையில் போதிய தண்ணீர் இன்றி பயிர்கள் காயத்தொடங்கியது. இதனைப் பார்த்து சிற்றரசு மனமுடைந்து காணப்பட்டார்.
    இந்த நிலையில் சிற்றரசு அனைக்குட்டம் பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் தா.பழூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் சிற்றரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×