என் மலர்
செய்திகள்

சிவகங்கையில் தேடப்பட்ட ரவுடிகள் 10 பேர் கைது
சிவகங்கையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் ஈஸ்வரன் (வயது 27) , காளியப்பன் (22), உதயகுமார் (47), சதாசிவம் (41), சங்கர் ஆகியோர் அங்கு நிற்பதை கண்டனர்.
அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் விரைந்து செயல்பட்டு 4 பேரை கைது செய்தனர். சங்கர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.
இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ரோந்து சென்றபோது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட செல்வராஜ் (22), ஜான் பீட்டர் (27), முகமது சிராஜுதீன் (22) நிஜாமுதீன், முத்துக்குமார் (24), அப்துல் ஹக்கீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிவகங்கை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ரவுடிகள் ஈஸ்வரன் (வயது 27) , காளியப்பன் (22), உதயகுமார் (47), சதாசிவம் (41), சங்கர் ஆகியோர் அங்கு நிற்பதை கண்டனர்.
அவர்கள், போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் போலீசார் விரைந்து செயல்பட்டு 4 பேரை கைது செய்தனர். சங்கர் மட்டும் தப்பி ஓடிவிட்டார்.
இளையான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ரோந்து சென்றபோது பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட செல்வராஜ் (22), ஜான் பீட்டர் (27), முகமது சிராஜுதீன் (22) நிஜாமுதீன், முத்துக்குமார் (24), அப்துல் ஹக்கீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Next Story






